12 ஆண்டுகளாக தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் இல்லை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 10 يونيو 2025

12 ஆண்டுகளாக தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் இல்லை



12 ஆண்டுகளாக தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் இல்லை

ஆயிரக்கணக்கான காலியிடங்களை நிரப்புவது எப்போது

தமிழகத்தில் 12 ஆண் டுகளாக அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனங்கள் இல்லை. காலியாக உள்ள 20 ஆயி ரம் பணியிடங்களை அரசு அரசு நிரப்புமா என கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 2011 வரை கல்வித்த குதி, வேலைவாய்ப்பு பதிவு அடிப்படையில் ஆண்டுதோறும் ஆசிரி யர் நியமனங்கள் நடத் தன, முன்னாள் முதல்வர் கருணாநிதி 2008 முதல் 2010 வரை 16,401 ஆசி ரியர்களும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2011 முதல் 2013 வரை தொடக்க பள்ளிகளில் 12,259 ஆசிரியர்களும், 2012 டிச.,13 ல் ஜெய வலிதாவால் 20,920 இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரே நாளில் உத்தரவு வழங்கி யது பள்ளி கல்வித்துறை யில் இன்று வரை சாதனையாக உள்ளது. கிடப்பில் போடும் அமைச்சர்

ஆனால் டுகளாக 10 ஆண் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் கல் வித்துறை தத்தளித்து வரு கிறது. தமிழக பட்ஜெட் டில் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கியும் 12 ஆண்டுகளாக தொடக்க பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் இல்லை. சமூக வளர்ச் சிக்கு அடிப்படை கல்வி தான் முக்கியம்.

ஆனால் தமிழகத்தில் அதற்கு முக்கியத்துவம் அளிப்பது இல்லை. தற் போதைய நிலையில் அரசு பள்ளிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக காலியாக உள்ளன. அ.தி. மு.க., தி.மு.க. ஆட்சி யில் ஆசிரியர் நியமனத் தில் அக்கறை செலுத்து வதில்லை. அமைச்சர் மகேஷின் கவனத்திற்கு ஆசிரியர்கள் சென்றால் றாக்குறையை கொண்டு நிதிப்பற் காரணம் காட்டி கிடப்பில் கோரிக்கையை போடுகிறார்.

முதல்வர் ஸ்டாலின் 2024ல் சட்டசபையில் 110 விதியின் கீழ் ஜன.. 2026க்குள் 19,260 ஆசிரி யர்கள் டி.ஆர்.பி., மூலம் நியமிக்கப்படுவர் என அறிவித்தார். ஆனால் அதற்கான அரசாணை இதுவரை வெளியிட வில்லை என ஆசிரியர்கள் ஆதங்கப்படுகின்றனர். கண்துடைப்பான நடவடிக்கை

அவர்கள் கூறியதாவது:

தமிழகத்தில் பெண்க ளுக்கு இலவச பஸ் பாஸ், மகளிர் உரிமை தொகை, டாஸ்மாக்கிற்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத் தைவிட அரசு தொடக்கப் ஆசிரியர் நியமனங்கள் மேற்கொள் வதில் அரசு ஆர்வம் காட் டுவதில்லை.

பட்ஜெட்டில் கல் வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கியும், ஆசிரியர் பணியிடங்களை நிய மிக்க நிதிப்பற்றாக்குறை உள்ளதாக அமைச்சர் கூறு கிறார். அதேநேரம் இந்து றையில் ரூ.பல லட்சங் களில் திட்டப் பணிகள் படுஜோராக நடக்கின் றன.

லட்சக்கணக்கில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்களை மட்டும் அரசு பெருமையாக வெளி மீட்டு வருகிறது.

ஆனால் அதற்கான கட்டமைப்பு நடவடிக் கைகள், ஆசிரியர் நியம னங்கள் குறித்து எதுவும் மேற்கொள்ளவில்லை. 2011ல் தி.மு.க., தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட பல வாக்குறுதிகள் இது வரை நிறைவேற்றப்பட வில்லை.

14.2.14... தேர்ச்சி பெற்று 30 ஆயிரத்திற் கும் மேற்பட்டோர் தகுதி உள்ளவர்களாக உள்ள நிலையில் நியமனத் தேர்வு என்ற பெயரில் புதி தாக தேர்வு நடத்தி 2700 பேரை நியமிக்க உள்ளது. தகுதி உள்ளவர்களும், காலியிடங்களும் அதிக எண்ணிக்கையில் இருக் கும் போது இதுபோல் குறைந்த எண்ணிக்கையி லான தியமனங்கள் என் பது கண்துடைப்பான நட வடிக்கையாகவே உள்ளது என்றனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.