நாளை (04.01.2025) சனிக்கிழமை - பள்ளிகளுக்கு முழு வேலைநாள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 3 يناير 2025

நாளை (04.01.2025) சனிக்கிழமை - பள்ளிகளுக்கு முழு வேலைநாள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு?



நாளை (04.01.2025) சனிக்கிழமை - பள்ளிகளுக்கு முழு வேலைநாள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு?

நாளை ( 04.01.2025 ) சனிக்கிழமை பள்ளி முழு வேலை நாள் :- * இராணிப்பேட்டை

* விழுப்புரம்

* தஞ்சாவூர்

* தூத்துக்குடி

* திருவண்ணாமலை

* சிவகங்கை

* இராமநாதபுரம்

* திருவாரூர்...

பள்ளிகளுக்கும் 04.012025 சனிக்கிழமை அன்று பணி நாளாக செயல்பட ஆணையிடுதல். தொடர்பாக.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் 04.012025 சனிக்கிழமை அன்று பணி நாளாகும். எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் வெள்ளிக்கிழமை கால அட்டவணையினை பின்பற்றி, பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட வேண்டும் என அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.



இராணிப்பேட்டை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வகை அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு நாளை (04.01.2025) சனித்திழமை முழு வேலை நாளாக செயல்பட அறிவிக்கப்படுகிறது. செவ்வாய் கிழமை கால அட்டவணை பின்பற்றப்பட வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.


தஞ்சாவூர்

🟣 அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் வணக்கம்.

மழை காரணமாக விடுமுறை விடப்பட்ட நாட்களுக்கு ஈடு செய்யும் விதமாக நாளை (04.01.2025) சனிக்கிழமை பள்ளி முழு வேலை நாள் என்று அறிவிப்பு வந்துள்ளது.

எனவே,

இந்த தகவலை அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் தெரிவித்து நாளை(04.01.25) சனிக்கிழமை பள்ளி சிறப்பாக நடைபெற தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் பட்டுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) ஆகியோர்களின் அறிவுரைகளின்படி இத்தகவல் வழங்கப்படுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.