கணினி அறிவியல் பி.எட். பட்டதாரிகளுக்கு வேலை வழங்க வேண்டும்! - ஜி.கே. வாசன் எம்.பி கோரிக்கை!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 21 يناير 2025

கணினி அறிவியல் பி.எட். பட்டதாரிகளுக்கு வேலை வழங்க வேண்டும்! - ஜி.கே. வாசன் எம்.பி கோரிக்கை!!



கணினி அறிவியல் பி.எட். பட்டதாரிகளுக்கு வேலை வழங்க வேண்டும்! ஜி.கே. வாசன் எம்.பி கோரிக்கை!!

தமிழக அரசு, தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

தமிழக அரசு, மாநிலத்தில் கணினி அறிவியல் கல்விக்கும், கணினி ஆசிரியர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

மத்திய அரசின் Samagra Shiksha திட்டத்தின் வாயிலாக ICT நிதியை பெற்று மாநிலம் முழுவதும் உள்ள 14,000 க்கும் மேற்பட்ட நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் Hi Tech Lab நிறுவும் பணியை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக மத்திய அரசு நிதி வழங்குகிறது.


அதன்படி மாநில அரசு, கணினி அறிவியல் பாடத்திற்கு என்று பாடத்திட்டம் உருவாக்கி, பாடப்புத்தகம் தயார் செய்து, கணினி பயிற்றுநர்களை கொண்டு கணினி அறிவியல் பாடத்தை கற்பிக்க வேண்டும். ஆனால் மத்திய அரசின் Ministry of Education வெளியிட்ட இந்த நடைமுறைகளை தமிழக அரசு முறையாக கடைபிடிக்கவில்லை.

குறிப்பாக அந்த நிதியைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு கணினி அறிவியலை கற்பிக்காமல் EMIS WORK என்கின்ற அலுவலகப் பணியை மேற்கொள்வது நியாயமில்லை.

2008-2009 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் Computer Instructor ஐ நியமிக்கும் போது கணினி அறிவியல் பி.எட் படித்தவர்களையே நியமிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசு தன்னிச்சையாக செயல்படுவது முறையல்ல. இதனால் மாணவர்களும், படித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களும் தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தமிழ்நாடு அரசின் நிரந்தர பணியிடத்தில் நியமனம் பெற்று கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக உயர்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆய்வக உதவியாளர்கள் 6,000 க்கு மேற்பட்டவர்களை மத்திய அரசிடம் பெறுகின்ற நிதியை கணக்கு காட்டுவதற்காக Hi Tech Lab ல் பணிபுரிய கட்டாயப்படுத்துவதும் சரியல்ல.

எனவே தமிழக அரசு மத்திய அரசின் கல்விக்கான நிதியை மாணவர்கள், ஆசிரியர்கள் நலன் கருதி முறையாக, சரியாகப் பயன்படுத்த வேண்டும்.

அதாவது மாணவர்களின் கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும், படித்து வேலைக்காக காத்திருக்கும் பி.எட் பட்டதாரிகளுக்கு வேலை கொடுக்கும் வகையிலும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படியும் தமிழக அரசு செயல்பட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்...

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.