அரசு பள்ளி ஆசிரியர்கள் பற்றாக்குறை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்! Shortage of government school teachers - Edappadi Palaniswami condemns! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 25 نوفمبر 2024

அரசு பள்ளி ஆசிரியர்கள் பற்றாக்குறை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்! Shortage of government school teachers - Edappadi Palaniswami condemns!



அரசு பள்ளி ஆசிரியர்கள் பற்றாக்குறை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்! Shortage of government school teachers - Edappadi Palaniswami condemns!

எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயலலிதா சுமார் 20,000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பியது இன்றளவும் வரலாற்றுச் சாதனையாக உள்ளது. ஆனால், 2021-ல் ஸ்டாலினின் திமுக அரசு பதவியேற்றதில் இருந்து துறைகள் தோறும் காலிப் பணியிடங்கள் அதிகரித்துள்ளன. மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் கல்வித் துறையில் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன.

அவற்றை உடனடியாக நிரப்பிடக் கோரி பலமுறை நான் இந்த அரசை வலியுறுத்தி இருக்கிறேன். அரசு ஊழியர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு சங்கங்களும் வலியுறுத்தியுள்ளன. 5,154 தற்காலிகப் பட்டதாரி ஆசிரியர்களை நியமித்து, அதன் மூலம் மாணவர் கற்றல் நலன் பாதுகாக்கப்படுவதாக திரு. ஸ்டாலினின் திமுக அரசு தெரிவித்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. நியமனத் தேர்வு

ஆனால், இந்த அரசு 2024-ம் ஆண்டு, BT / BRTE பட்டதாரி ஆசிரியர் பணியிடம் 3, 192 என்று விளம்பரம் செய்து அதற்காக நியமனத் தேர்வு நடத்தியது. தற்போது இதில் பல பணியிடங்களை குறைத்து சுமார் 2,803 பணியிடங்களுக்கு மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்பு நடந்துள்ளதாகத் தேர்வு எழுதிய ஆசிரியர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.

தற்காலிக ஆசிரியர்கள்

எனவே, இந்த ஆண்டு தேர்வு எழுதியவர்களில் இருந்து 5,154 காலிப் பணியிடங்களையும் நிரப்ப ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்காலிக ஆசிரியர்களை பொறுத்தவரை பணிக்காலம் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. இதனால், அரசின் பொதுத் தேர்வுகளுக்கு தேர்வு கண்காணிப்பாளர் பணிக்கு போதுமான அளவு ஆசிரியர்கள் இருப்பதில்லை. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்

10 மற்றும் +2 வகுப்பு மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இதுமட்டுமல்லாமல், தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களில் பலர் பாடம் நடத்துவதற்கான ஆசிரியர் (B.Ed.,) கல்வித் தகுதி பெறாத, சாதாரண பட்டதாரிகளாக உள்ளனர். இதனால் மாணவர்களின் கல்வித் தரம் குறைகிறது. இனியாவது பள்ளிக் கல்வித் துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர்,

இந்த ஆண்டு (2024) BT / BRTE பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்குத் தேர்வு எழுதியவர்களில் இருந்தே, காலியாக உள்ள 5,154 பணியிடங்களுக்கும் முழுமையாக நிரப்பிட வேண்டும் என்றும், இதுவரை தேர்வு நடத்திடாத மற்ற ஆசிரியர் பணியிடங்களுக்கும் உடனடியாகத் தேர்வு நடத்தி காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்பிட வேண்டும் என்றும் ஸ்டாலினின் திமுக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.