நெருங்கும் அரையாண்டு தேர்வு - பள்ளி ஆசிரியர்களுக்கு பணிச்சுமை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 22 أكتوبر 2024

நெருங்கும் அரையாண்டு தேர்வு - பள்ளி ஆசிரியர்களுக்கு பணிச்சுமை



நெருங்கும் அரையாண்டு தேர்வு - பள்ளி ஆசிரியர்களுக்கு பணிச்சுமை

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளின் பயிலும் மாணவர்களின் தரவுகள் பள்ளிக் கல்வித் துறையின் எமிஸ் தளத்தில் பதிவிடப்பட்டு, அதற்கேற்ப நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், எமிஸ் தளத்தில் பதிவிட வேண்டிய அவசியம் உள்ளதால் ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளதாகவும், கற்பிக்கும் பணி பாதிக்கப்படுவதாகவும் கூறியுள்ளனர். எமிஸ் பணியிலிருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென தேசிய ஆசிரியர் சங்கம் பள்ளிக் கல்வித் துறையை வலியுறுத்தி உள்ளது.

எமிஸ் இணையதளம் (

கல்வி மேலாண்மை தகவல் முகமை) என்பது பள்ளிக் கல்வித் துறையினால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தளத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவர்களின் தரவுகள் உள்ளிடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், கல்வித் துறை அலுவலர்கள், ஆசிரியர்களின் தினசரி செயல்பாடுகளும் எமிஸ் தளம் வாயிலாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. எமிஸ் பணியில் ஆசிரியர்கள் :

எமிஸ் தளத்தின் தரவுகள் அடிப்படையில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தளத்தில் மாணவர்களின் தரவுகள் முதல் தேர்வு மதிப்பெண்கள் என அனைத்து பதிவேற்றம், நீக்கம் உட்பட பாரமரிப்பு பணிகளையும் ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்.

கூடுதல் பணிச்சுமை :

மாணவர்களுக்கு கற்பிக்கும் பணி மட்டுமில்லாமல் எமிஸ் தளத்தின் பணியையும் ஆசிரியர்களே மேற்கொள்ளுவதால் கூடுதல் பணிச்சுமையாக இருப்பதாக கருதுக்கின்றனர். எமிஸ் பணியை ஆசிரியர்கள் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தெரிவிக்கின்றனர். நெருங்கும் அரையாண்டு தேர்வு :

தற்போது பள்ளிகளில் 2-ம் பருவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூடுதல் பணியினால் மாணவர்களை கவனிப்பதற்கும், பாடங்களை நடத்துவதற்கும் மிகுந்த சிரமப்படுவதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், டிசம்பரில் அரையாண்டு தேர்வு நடைபெறவுள்ளது. இதனால் மாணவர்களின் தேர்ச்சிக்காக ஆசிரியர்கள் முழுமூச்சில் பணி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.

தனியாக பணியாளர் நியமிக்க வேண்டும்

எமிஸ் தளத்தின் பணிகளை செய்ய தனியாக பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியிருந்தார். அந்த வகையில், உடனடியாக அனைத்து மேல்நிலை, உயர்நிலை பள்ளிகளில் அதற்கென்று தனி அலுவலர்களை நியமிக்க வேண்டும் எனவும், ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் தேசிய ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.