அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 2 أكتوبر 2024

அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி



அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத், காஞ்சிபுரம், உத்திரமேரூர் போன்ற பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளி கட்டிடங்கள், நூலகங்கள் குறித்து கேட்டறிந்து நேரில் சென்று பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார். ஆய்வுகளை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நேற்று திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.

இதையடுத்து சிகிச்சைக்காக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ கண்காணிப்பில் இருந்து வரும் அவர் இன்று காலை வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.