SMC MEETING AGENDA 03/05/2024
பள்ளிக் கல்வித்துறை தஞ்சாவூர் மாவட்டம்
அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் - பள்ளி மேலாண்மைக் குழுக் சிறப்பு கூட்டம்
• நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டி
உயர்கல்வி வழிகாட்டி குழு உறுப்பினர்களின் பொறுப்புகள் மற்றும் பங்களிப்பு கொடுக்கப்பட்டுள்ள QR Code-ஸ்கேன் செய்து அறிந்து கொள்ளலாம்
• உயர்கல்வி அறிவோம்
உயர்கல்வி வாய்ப்புகள் மற்றும் கல்லூரி சேர்வதற்கான வழிமுறைகளை குறித்து சார்ந்த துறைகளின் வல்லுனர்கள் மூலம் நேரடி மற்றும் பதிவு செய்யப்பட்ட காணொளிகள் கல்வி தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்பப்படுகிறது கொடுக்கப்பட்டுள்ள QR Code- ஸ்கேன் செய்து கண்டு பயன் அடையலாம்
2024 ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறவிருக்கும் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்று உயர் கல்வி விண்ணப்பிக்காத மற்றும் துணை தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ மாணவியரின் விவரங்களை தலைமையாசிரியர் சென்று அவர்களை சந்திக்கும் சவால்கள் மற்றும் உயர்கல்வி பெறுவதற்கு தேவைப்படும் உதவிகள் என்னவென்பதை கண்டறிந்து பெறப்பட்ட தகவல்களை தலைமை ஆசிரியர் மற்றும் உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியரிடம் தெரியப்படுத்த மேலும் இல்லம் தேடி கல்வியாளர்கள் உதவியுடன் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் உள்ளீடு (Scan QR Code) செய்ய கேட்டுக்கொள்ளவேண்டும்.
• அனைத்து குழந்தைகளும் பள்ளியில்.
100% பள்ளிச் சேர்க்கை உறுதி செய்தல்* EER மேம்படுத்தும் செயல்பாடுகள் சரியாக நடைபெறுகிறதா என்பதை சரி பார்த்தல்.
10 மட்டும் 12 வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி அடையாத மற்றும் தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்கள் தங்களது பள்ளியில் பயிற்சி மையங்களில் சேர்ந்து பயில்வதையும் தொடர்ந்து வரும் துணை தேர்வு எழுதுவதையும் உறுதி செய்தல்
• நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி
இது நாள் வரை NSNOP WHATS APP CHANNEL வழியாக தங்கள் பள்ளிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி பகிர்ந்தளிப்பு விவரங்கள் தொடங்கப்பட்டுள்ள பணிகள் மற்றும் அதன் தற்போதைய நிலை சார்ந்த தகவல்களை பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் கலந்துரையாடவேண்டும்.
இனிவரும் காலங்களில் பள்ளிக்கான தேவைகளை பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றி TNSED Parent APP - பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே பள்ளிகளுக்கான நன்கொடைகள் NSNOP வாயிலாக முறைப்படுத்தி நிறைவேற்றப்படும் இந்த தகவலை பள்ளி மேலாண்மை குழுக் கூட்டத்தில் பகிர்ந்து கொள்ளவேண்டும்.
வெள்ளிக்கிழமை.
பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
தவறாமல் சிறப்பான முறையில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டதை நடத்திடுவீர்! பள்ளி வளர்ச்சிக்கு உதவிடுவீர்!
முதன்மைக் கல்வி அலுவலர்,
தஞ்சாவூர் மாவட்டம்
الجمعة، 3 مايو 2024
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.