அரசுப் பள்ளிகளில் விரும்பி இணையும் மாணவர்கள் - சேர்க்கை தொடங்கிய 12 நாட்களில் 1 லட்சத்தை தாண்டியது! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 12 مارس 2024

அரசுப் பள்ளிகளில் விரும்பி இணையும் மாணவர்கள் - சேர்க்கை தொடங்கிய 12 நாட்களில் 1 லட்சத்தை தாண்டியது!

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்தை தாண்டியது: பள்ளிக்கல்வித்துறை - Students Interested in Govt Schools - Admission Crosses 1 Lakh in 12 Days!

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்தை தண்டியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மார்ச் 1 ஆம் தேதி அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை பள்ளிக்கல்வித்துறை தொடங்கியது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10,946 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் கடந்த 10 நாட்களில் 96,314 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மார்ச் 1 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் மாணவர் சேர்க்கையில் 96,314 பேர் அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்


தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கிய நிலையில், 12 நாட்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சேர்ந்துள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை தகவல்!

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தைத் தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் சேர மாணவர்கள் பெருமளவில் விருப்பம்.

ஆகஸ்ட் மாதம் வரை மாணவர்கள் சேர்க்கை நடைபெறவுள்ளதால் இந்த ஆண்டு புதிய உச்சத்தை தொட வாய்ப்பு.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.