தேர்தல் பணி - விண்ணப்பம் சமர்பிக்காத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 21 مارس 2024

தேர்தல் பணி - விண்ணப்பம் சமர்பிக்காத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை



தேர்தல் பணி - விண்ணப்பம் சமர்பிக்காத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை Election work - Action against teachers who do not submit application

வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு , தேர்தல் பணியாற்ற பள்ளி ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. ஆனால் நாளது தேதிவரை பல பள்ளிகளிடமிருந்து விண்ணப்பம் பெறப்படவில்லை எனத் தெரியவருகிறது. எனவே ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் தேர்தல் விண்ணப்ப படிவங்களை ஒப்படைக்காத அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உடனடியாக 22.03.2024 முற்பகல் 11.00 மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அவ்வாறு ஒப்படைக்காத பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மீது மாவட்ட ஆட்சியரின் அறிவுரைகளின்படி தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.