நாளை டிட்டோ ஜாக் நடத்தும் ஆர்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கூட்டமைப்பு பங்கேற்காது - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 12 أكتوبر 2023

நாளை டிட்டோ ஜாக் நடத்தும் ஆர்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கூட்டமைப்பு பங்கேற்காது



ஊடகம் மற்றும் பத்திரிகை செய்தி

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கூட்டமைப்பு நாளை 30 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து டிட்டோ ஜாக் நடத்தும் ஆர்பாட்டத்தில் பங்கேற்கவில்லை - நிறுவனத் தலைவர் - சா.அருணன் - அறிக்கை

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்ம்மைப்பு நாளை டிட்டோ ஜாக் ( தொடக்கக்கல்வி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு )30 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நடத்தும் ஆர்பாட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு அனைத்து பொறுப்பாளர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன், அமைச்சர் அவர்கள் அனைத்து சங்கங்களுடன் கலந்துரையாடி ஒவ்வொரு நிலையில் உள்ள பிரச்சனைகளை கேட்டறிந்து படிப்படியாக நிறவேற்றுவேன் என உறுதியளித்துள்ளதாலும் கால அவகாசம் தேவை என்பதாலும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு அவரசரம் காட்டாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் தலைமை அறிவிக்கின்ற வரை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் மாநில மண்டல, மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் எவ்வித போராட்டத்திலும் பங்கேற்க அறிவுறுத்த கூடாது என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

சா.அருணன்

நிறுவனத் தலைவர்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.