ஆன்லைன் பணி புறக்கணித்த ஆசிரியர்கள் Online work is ignored by teachers
எமிஸ் என்ற கல்வி மேலாண்மை தளத்தில், பல்வேறு விபரங்களை பதிவு செய்யும் பணிகளை, ஆசிரியர்களுக்கு வழங்குவதால், மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க முடியாமல் நேரம் வீணாவதாக, ஆசிரியர்கள் கவலை தெரிவித்தனர்.
இந்நிலையில், தொடக்க கல்வித்துறையில் உள்ள ஆசிரியர்கள் பலர், நேற்று முதல் எமிஸ் ஆன்லைன் பதிவு பணிகளை புறக்கணித்துள்ளனர். அதனால், அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மாணவர் உடல் நலன் குறித்த கணக்கெடுப்பு, பள்ளிகளின் உள்கட்டமைப்பு குறித்த தகவல்களை பதிவு செய்ய முடியாமல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.