கனமழை எச்சரிக்கை எதிரொலி: இரண்டு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 25 يوليو 2023

கனமழை எச்சரிக்கை எதிரொலி: இரண்டு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கை எதிரொலி: தெலுங்கானாவில் இரண்டு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை

இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வரும்நிலையில் கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதன்படி தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத், ரங்கா ரெட்டி, மேட்சல், விகாராபாத், சங்கரெட்டி, மேடக், காமரெட்டி, மெஹபூப்நகர், நாகர்கர்னோல், சித்திபேட், ஜங்கான், ராஜண்ணா சிர்சில்லா மற்றும் கரீம்நகர் ஆகிய இடங்களில் அவ்வப்போது கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் ஜூலை 27 ஆம் தேதி வரை தெலுங்கானாவில் கனமழை தொடரும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் ஐதராபாத்துக்கு நாளையும் நாளை மறுநாளும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் அநேக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் நாளை மற்றும் நாளை மறுதினம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.