நாளை 5ம் தேதி உள்ளூர் விடுமுறை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 3 يوليو 2023

நாளை 5ம் தேதி உள்ளூர் விடுமுறை

ஜூலை 5ம் தேதி உள்ளூர் விடுமுறை

நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள சிக்கல் நவநீத ஈஸ்வர சுவாமி திருக்கோயிலில் ஜூலை 5ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..

உள்ளூர் விடுமுறை:

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் கொண்டாடப்படும் சிறப்பு பண்டிகைகள் மற்றும் கோவில் திருவிழாக்களை முன்னிட்டு மக்கள் அதனை சிறப்பாக கொண்டாடும் வகையில் அம்மாவட்டத்திற்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நடப்பு ஆண்டு நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் ஜூலை 5ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.


இதனை முன்னிட்டு அம்மாவட்டத்தில் ஜூலை 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த உள்ளூர் விடுமுறை பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்த விடுமுறை ஈடு செய்யும் வண்ணம் ஜூலை 8ம் தேதி சனிக்கிழமை அன்று பள்ளிக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.