308 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 1 مايو 2023

308 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை



308 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை: அமைச்சர்கள் வழங்கினர்

திருச்சி, ஏப். 30: திருச்சியில் தமிழகத்தின் 10 மாவட்டங்களைச் சேர்ந்த 308 தனியார் பள்ளிகளுக்கான அங்கீகார ஆணைகளை அமைச்சர்கள் கே.என். நேரு. அன்பில் மகேஸ்பொய்யாமொழி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை வழங்கினர். திருச்சி, காட்டூர் பகுதி தனியார் பள்ளியொன்றில் தமிழக பள் ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில் திருச்சி, தஞ்சா வூர், புதுக்கோட்டை, கரூர், நாகை, திருவாரூர், அரியலூர், திண் டுக்கல், பெரம்பலூர், மயிலாடுதுறை ஆகிய 10 மாவட்டங்களைச் சேர்ந்த 308 தனியார் பள்ளிகளுக்கு புதுப்பிக்கப்பட்ட அங்கீகார ஆணைகள் முதல் கட்டமாக வழங்கப்பட்டன.

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் 12, 631 மெட்ரிக் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், சுயநிதி உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்கப் பள் ளிகள், இளம் மழலையர் பள்ளிகள் மற்றும் மாநிலப் பாடத்திட் டம் அல்லாத பிற வாரிய பள்ளிகள் செயல்படுகின்றன.

இவ்வகையான தனியார் பள்ளிகள் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பள்ளியின் அங்கீகாரத்தை புதுப்பித்து செயல்படுகின்றன. அதேபோல மாநிலப் பாடத் திட்டத்தின் கீழ் செயல்படும் தனியார் பள்ளிகள் பயன்பெறும் வகையில் மண்டல வாரியாக அங்கீகாரச் சான்றுகளைப் புதுப்பித்து வழங்கவும் நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளது. நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் இரா. வைத்திநாதன், மாவட்டக் காவல் கண்கா ணிப்பாளர் சுஜீத்குமார், எம்எல்ஏக்கள் எஸ். இனிகோ இருதய ராஜ், ந. தியாகராஜன், மாநகராட்சி துணை மேயர் ஜி. திவ்யா, முதன்மைக் கல்வி அலுவலர் ர. பாலமுரளி, தனியார் பள்ளிகள் இயக்குநர் சு.நாகராஜ முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.