ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தப்படும் சொத்து வரிக்கு (Property Tax) 5% ஊக்கத்தொகை - தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 18 أبريل 2023

ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தப்படும் சொத்து வரிக்கு (Property Tax) 5% ஊக்கத்தொகை - தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பு

ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தப்படும் சொத்து வரிக்கு (Property Tax) 5% ஊக்கத்தொகை - தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பு

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் சொத்து உரிமையாளர்கள் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய சொத்துவரியினை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தி 5% ஊக்கத்தொகை பெறலாம்.

கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சிகள் சட்டம் 1998- க்கு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 13.04.2023 முதல் தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சிகள் விதிகள் 2023, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சிகள் சட்டம் 1998, பிரிவு 84 (1) ல் . Five percent of the net property tax payable by an assessee, subject to a maximum of five thousand rupees shall be granted as an incentive, who has paid the property tax within thirty days from the date of commencement of the half-year. அதன்படி, சொத்து உரிமையாளர்கள் தங்களது 2023-24 ஆண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்துவரியினை ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்கள் ஊக்கத் தொகை பெற தகுதியுடையவர் ஆகிறார்கள். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரியினை ஏப்ரல் 30 தேதிக்குள் செலுத்தி ஊக்கத்தொகையினை பெற்றிடுமாறும் இதன் மூலம் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளில் தங்களது பங்களிப்பினை வழங்கிடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.