குரூப்-4 விவகாரம் - விசாரணை கோரிய இபிஎஸ்!; ஆதாரம் இருக்கா? ஸ்டாலின் ஆவேசம்!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 27 مارس 2023

குரூப்-4 விவகாரம் - விசாரணை கோரிய இபிஎஸ்!; ஆதாரம் இருக்கா? ஸ்டாலின் ஆவேசம்!!

விசாரணை கோரிய இபிஎஸ்!

குரூப்-4 விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் இபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

அதில், "தென்காசி தனியார் பயிற்சி மையத்தை சேர்ந்த 2000 பேர் குரூப்-4ல் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரே பயிற்சி மையத்தை சேர்ந்த 2000 பேர் தேர்ச்சி பெற்றதால் பிற தேர்வர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

தவறு நடந்திருந்தால் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர் சட்டப்பேரவையில் வலியுறுத்தினார். ஆதாரம் இருக்கா? ஸ்டாலின் ஆவேசம்

குரூப்4 குறித்து இபிஎஸ் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.

அதில், "டிஎன்பிஎஸ்சி தேர்வில் ஊழல் நடைபெற்று இருப்பதாக எந்தவித ஆதாரமும் இன்றி பேசுகிறார்.

ஆதாரம் இருந்தால் இந்த அவையிலே நிரூபியுங்கள். சந்தேகத்தை எழுப்பலாம் குற்றச்சாட்டும் வகையில் ஊழல் நடந்திருப்பதாக கூறக்கூடாது.

எதிர்க்கட்சி தலைவர் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்" என ஆவேசமாக பேசினார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.