பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் 31.03.2023 வரை கால நீட்டிப்பு வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 28 مارس 2023

பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் 31.03.2023 வரை கால நீட்டிப்பு வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு

பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் இன்றுடன் (28.03.2023) முடிவடைந்த நிலையில் 31.03.2023 வரை கால நீட்டிப்பு வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!!


பார்வையில் காணும் அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறை ஆணையில் ஏப்ரல் 2023, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் செய்முறைத் தேர்வு 20.03.2023 முதல் 28.03.2023 வரை நடத்திட தெரிவிக்கப்பட்டது.

மாணவர்களின் நலன் கருதி, பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்விற்கு 31.03.2023 வரை கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட நாட்களில் செய்முறைத் தேர்விற்கு வருகைப் புரியாத அனைத்து பள்ளி மாணவர்களும் கலந்துக் கொள்ள, முதன்மைக் கல்வி அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.