05.03.2023 நாளை - மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 4 مارس 2023

05.03.2023 நாளை - மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

செய்திக்குறிப்பு

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 05.03.2023

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள வேலைநாடுநர்களை தனியார்துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு, கள்ளக்குறிச்சி மாவட்ட நிரவாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 05.03.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று கள்ளக்குறிச்சி - இந்திலியில் அமைந்துள்ள Dr.R.K.S. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெறவுள்ளது.

இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற தமிழக அளவில் பல்வேறு முன்னணி தனியார்துறைகளைச் சார்ந்த 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டு தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்கவுள்ளனர்.

மேலும், அயல் நாட்டு வேலைவாய்ப்பிற்கான பதிவு, சுய தொழில், வங்கி கடன் உதவிகள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து பிரத்யேக அரங்கம் அமைத்து ஆலோசனை வழங்கப்ப உள்ளது. இம்மாவட்டத்திலுள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் டிரைவர் உள்ளிட்ட 8-ம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி/ தோல்வி. பன்னிரெண்டாம் வகுப்பு. ஐ.டி.ஐ. டிப்ளமோ, அக்ரி, செவிலியர், ஆசிரியர் தகுதி, ஹோட்டல் மேனேஜ்மென்ட், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள் மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகள் போன்ற கல்வித்தகுதிகளையுடைய 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைநாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் விவரக்குறிப்பு(Bio-data), அனைத்து கல்விச்சான்றுகளின் நகல்கள், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில், ஒரே இடத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்களின் நேர்காணலில் கலந்து கொண்டு. வேலைநாடுநர்கள் தாங்கள் விரும்பும் வேலைவாய்ப்பினை பெற இது ஒரு நல்வாய்ப்பாக அமையும், மேலும் இம்முகாம் குறித்த விவரங்களுக்கு 9025479669/04151-295422 தொடர்புகொள்ளவும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.