கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 6ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
கன்னியாகுமரி: தக்கலை செய்கு பீர்முஹம்மது ஹாகிபு ஒலியுல்லா(ரலி) ஆண்டுவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது - கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தக்கலை செய்கு பீர்முஹம்மது ஹாகிபு ஒலியுல்லா (ரலி) ஆண்டுவிழாவை முன்னிட்டு 06.02.2023 (திங்கட்கிழமை) அன்னு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளுர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.
06.02.2023 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளுர் விடுமுறைக்கு ஈடாக 2023 மார்ச்சி திங்கள் இரண்டாவது சனிக்கிழமை (11.03.2023) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தக்கலை செய்கு பீர் முஹம்மது ஹாகிபு ஒலியுல்லா(ரலி) ஆண்டு விழாவிற்கு உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881(Under Negotiable Instruments Act 1881)-இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 06.02.2023 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும் என அவர் தெரிவித்து உள்ளார்.
الأربعاء، 1 فبراير 2023
New
வரும் 6ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.