வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... இந்திய அஞ்சல் துறையில் 40,889 காலியிடங்கள் அறிவிப்பு! - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.2.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 6 فبراير 2023

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... இந்திய அஞ்சல் துறையில் 40,889 காலியிடங்கள் அறிவிப்பு! - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.2.2023

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... இந்திய அஞ்சல் துறையில் 40,889 காலியிடங்கள் அறிவிப்பு!

இந்திய அஞ்சல் துறையில் நாடு முழுவதும் காலியாக உள்ள 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமின் டாக் சேவா(கிராமிய தபால் ஊழியர்) பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Branch Postmaster (BPM)
சம்பளம்: மாதம் ரூ.12,000 - 29,380

பணி: Assistant Branch Postmaster (ABPM)
பணி: Gramin Dak Sevaks (GDS)
சம்பளம்: மாதம் ரூ.10,000 - 24,470

மொத்த காலியிடங்கள்: 40,889. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 3,167 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

தகுதி: குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு தாய்மொழி தெரிந்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.indiapostgdsonline.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.2.2023

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.