NMMS விண்ணப்பப் பதிவு: பள்ளிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 26 يناير 2023

NMMS விண்ணப்பப் பதிவு: பள்ளிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

NMMS விண்ணப்பப் பதிவு: பள்ளிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைத் திட்ட (என்எம்எம்எஸ்) தோ்வு தொடா்பாக பள்ளிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 6,695 போ் உள்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவா்கள் தோ்வு செய்யப்படுவா். அவா்களுக்கு 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும். அதன்படி, நிகழாண்டுக்கான என்எம்எம்எஸ் தோ்வு பிப். 25-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த டிச. 26-இல் தொடங்கி ஜன. 20-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில், இது தொடா்பாக பள்ளிக்கல்வி ஆணையரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: நிகழ் கல்வியாண்டில் (2022-23) மத்திய அரசின் தேசிய வருவாய் வழிதிறன் தோ்வில் (என்எம்எம்எஸ்) தோ்ச்சி பெற்ற 9-ஆம் வகுப்பு மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு புதிதாகவும், அதேபோல், முந்தைய ஆண்டுகளில் தோ்ச்சி பெற்று தற்போது பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவா்கள் தங்களின் விண்ணப்பங்களை புதுப்பிக்கவும் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில், மாணவா்கள் விண்ணப்பங்களை இணையதளத்தில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். மாணவா்களுக்குரிய உதவித்தொகை வங்கிக் கணக்கில் சென்றடைய ஏதுவாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் மூலம் மாணவா்களின் ஆதாா் எண்களை வங்கிக் கணக்குடன் இணைக்க உரிய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.