பணிப்பதிவேடு பாதுகாப்பு மற்றும் வீண் கடிதப் போக்குவரத்துகளை தவிர்ப்பதற்காக தேர்வு நிலை / சிறப்பு நிலை வழங்க சிறப்பு முகாம் நடத்துதல் சார்பாக மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 5 يناير 2023

பணிப்பதிவேடு பாதுகாப்பு மற்றும் வீண் கடிதப் போக்குவரத்துகளை தவிர்ப்பதற்காக தேர்வு நிலை / சிறப்பு நிலை வழங்க சிறப்பு முகாம் நடத்துதல் சார்பாக மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!

பணிப்பதிவேடு பாதுகாப்பு மற்றும் வீண் கடிதப் போக்குவரத்துகளை தவிர்ப்பதற்காக தேர்வு நிலை / சிறப்பு நிலை வழங்க சிறப்பு முகாம் நடத்துதல் - தஞ்சாவூர் மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!

பள்ளிக் கல்வி சிறப்பு முகாம் - தஞ்சாவூர் கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு/மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை / சிறப்பு நிலை ஆணை வழங்குதல் - சிறப்பு முகாம் நடத்துதல்-சார்பாக

பார்வை

1.அரசாணை எண்.151 பள்ளிக்கல்வி [SE1(1)] துறை நாள்.09.09.2022

2.தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள். நக.பிசி.மேநிக/4/08/நாள் 24.10.2008.

3.இவ்வலுவலக சுற்றறிக்கை ந.க.எண் 2081/ஆ5/2022 நாள் 20.12.2022

பார்வை (1) இல் காணும் அரசாணையில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி 01:10.2022 முதல் அரசு/மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கான தேர்வுநிலை/சிறப்பு நிலை அனுமதிக்கும் அதிகாரம் மாவட்டக் கல்வி அலுவலருக்கு (இடைநிலை) வழங்கப்பட்டுள்ளது.

பார்வை (2) இல் காணும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின்படி தேர்வுநிலை/சிறப்புநிலை வழங்குவதில் காலதாமதம் ஏற்படாமலும், பணிப்பதிவேடு பாதுகாப்பு மற்றும் வீண் கடிதப் போக்குவரத்துகளை தவிர்ப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்று கட்ட சிறப்பு முகாம் நடத்தி அன்றைய தினம் தளத்திலேயே ஆணை வழங்கிட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எனவே தஞ்சாவூர் கல்வி மாவட்டத்தில் 31.12.2022 அன்றைய நிலவரப்படி தேர்வுநிலை/சிறப்பு நிலை எய்திய ஆசிரியர்களுக்கு ஆணை வழங்கிட கீழ்க்காணும் விவரப்படி முதற்கட்டமாக சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.