26.12.2022 - ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் - 5.1.23 அன்று அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு முதலமைச்சர் கவனத்தை ஈர்க்கின்ற. வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 26 ديسمبر 2022

26.12.2022 - ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் - 5.1.23 அன்று அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு முதலமைச்சர் கவனத்தை ஈர்க்கின்ற. வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு!

ஜாக்டோ-ஜியோ-05.1.2023 அன்று கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத்தலைநகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்

➖➖➖➖➖➖➖

இன்று 26 12 2022 அன்று சென்னையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் நடைபெற்றது

அதில் கீழ்க்கண்ட முடிவுகள் தீர்மானிக்கப்பட்டன

பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் முடக்கப்பட்ட அகவிலைப்படி சரண்டர். உடனே வழங்க வேண்டும்

இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர் களின் ஊதியம் முரண்பாடுகளை களைய வேண்டும். தொகுப்பூதியம் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணி புரியும் ஆசிரியர்கள் சத்துணவு அங்கன்வாடி எம்ஆர்பி செவிலியர் வருவாய் கிராம உதவியாளர் ஊர் புற நூலகர் கால முறை ஊதியம் வழங்க வேண்டும்

காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும்

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 5.1.23 அன்று அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு முதலமைச்சர் கவனத்தை ஈர்க்கின்ற. வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது

வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் வருகிற 8 .1. 2023 மதுரையில் ஒருங்கிணைப்பாளர் கூட்டம் மற்றும் உயர்மட்ட குழு கூட்டம் கூட்டி அடுத்த கட்ட இயக்கத்தை திட்டமிடும்

➖➖➖➖➖➖➖➖

மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஜாக்டோ ஜியோ

➖➖➖➖➖➖➖➖➖

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.