அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் போராட்டம் வேலை நாள்களாக அறிவிப்பு - அரசாணை வெளியீடு.
அதிமுக ஆட்சியில் அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்திய நாட்கள் வேலை நாளாக அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்திய நாட்கள் வரன்முறைப்படுத்தப்படும் என பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 17 முதல் பிப்ரவரி 26 ஆம் தேதி வரை ஜாக்டோ ஜியோ வருவாய் துறை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.