8ம் வகுப்பு தனித்தேர்வர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 5 سبتمبر 2022

8ம் வகுப்பு தனித்தேர்வர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

தனித்தேர்வர்கள், 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்ட அறிக்கை:

எட்டாம் வகுப்பு பொதுதேர்விற்கு, வரும் அக்., 1ம் தேதி அன்று, 12 வயதுக்கு மேல் பூர்த்தி அடைந்த தனித்தேர்வர்கள், நாளை முதல் 10ம் தேதி வரை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள, சேவை மையங்களுக்கு நேரில் சென்று, 'ஆன்லைன்' வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் 125 ரூபாய் மற்றும் 'ஆன்லைன்' பதிவுக் கட்டணம் 50 ரூபாய் என, 175 ரூபாய், சேவை மையங்களில் நேடியாக செலுத்தலாம்.

மேற்குறிப்பிட்ட நாட்களில், விண்ணப்பிக்கத் தவறியவர்கள் வரும் 12, 13 ஆகிய தேதிகளில், தட்கல் முறையில், விண்ணப்பக் கட்டணத் தொகை 500 ரூபாய் கூடுதலாக செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.