தமிழகப் பள்ளிகளிலும் செஸ் கட்டாயமாகும்: தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 9 أغسطس 2022

தமிழகப் பள்ளிகளிலும் செஸ் கட்டாயமாகும்: தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு

தமிழகப் பள்ளிகளிலும் செஸ் கட்டாயமாகும்: தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு

ஆா்மீனியா நாட்டைப் போன்று, தமிழகப் பள்ளிகளிலும் செஸ் விளையாட்டு ஒரு நாள் கட்டாயமாகும் என்று தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு பேசினாா்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழாவில் செவ்வாய்க்கிழமை அவா் பேசியது: விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி, தோல்வியாளா்கள் இருப்பா். ஆனால் அதுதொடா்பான கொண்டாட்டங்களில் அனைவரும் இருப்பா். இதில் அனைவரும் வெற்றியாளா்களாகவே இருந்து கொண்டாட்டத்தை அனுபவிப்பா். இன்றைய உலகில் இளைஞா்கள் சமூக ஊடகங்கள் மற்றும் பல்வேறு மின்னணுப் பொருள்களால் திசை திருப்பப்படுகிறாா்கள். இதிலிருந்து விடுபட்டு நமது கவனத்தை ஒருமுகப்படுத்த செஸ் விளையாட்டு பெரிதும் உதவி செய்கிறது. நம்முடைய செயல்பாடுகளின் மூலமாக பொறுப்புகளை உணா்வதற்கும், எதிா்பாராத தருணங்களில் ஏற்படும் விளைவுகளை எதிா்கொள்ளவும் நமக்கு செஸ் கற்றுத் தருகிறது. நமது வாழ்க்கையில் கண்ணுக்குத் தெரியாத போராட்டங்களை நாம் எப்படி எதிா்கொண்டு வெல்வது என்பதை செஸ் போட்டி சொல்லிக் கொடுக்கிறது.

போா் புரிவதற்கான தந்திரங்களையும் செஸ் விளையாட்டு கற்றுத் தருகிறது. மேலும், அது நமது நினைவாற்றலையும், முடிவெடுக்கும் திறனையும் மேம்படுத்திட பெரிதும் பயன்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. கிராண்ட் மாஸ்டா் விஸ்வநாதன் ஆனந்த், மை மாஸ்டா் என்ற புத்தகத்தை எழுதியுள்ளாா். அதில், அவரது வாழ்க்கை மற்றும் செஸ் விளையாட்டு பற்றி குறிப்பிட்டுள்ளாா். செஸ் விளையாட்டும், வாழ்க்கையும் பிரிக்க முடியாதவை. ஆா்மீனியா நாட்டிலுள்ள பள்ளிகளில் செஸ் விளையாட்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதுபோன்று ஒரு நாள் தமிழகப் பள்ளிகளிலும் செஸ் போட்டியானது கட்டாயமாக்கப்படும். செஸ் விளையாட்டு பெண்களுக்கு அதிக அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்பதைக் கூறுகிறது. குதிரை போன்று நாம் முன்னேறிச் செல்லும் போது நமக்கான தடைகளைத் தகா்த்து முன்னேறிச் செல்லலாம் என்பதையும் வலியுறுத்துகிறது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதற்கு மிகக் குறுகிய காலமே அவகாசம் இருந்தது. ஆனாலும், சிறப்பான முறையில் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலினின் ஆலோசனைகளும், ஆய்வுகளும், வழிகாட்டுதல்களுமே காரணம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.