உயர் கல்வியில் சேராத மாணவர் விபரம் சேகரிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 26 أغسطس 2022

உயர் கல்வியில் சேராத மாணவர் விபரம் சேகரிப்பு

உயர் கல்வியில் சேராத மாணவர் விபரம் சேகரிப்பு

சென்னை, ஆக. 27 பிளஸ் 2 முடித்து உயர் கல்வியில் சேராத மாணவர் விபரங்களை கணக்கெடுக்குமாறு, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக பள்ளி கல்வி பாடத் திட்டத்தில், அரசு பள்ளிகளில் பிளஸ் 2 படித்து, பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளிகளில் 'ஆன்லைன்' வழியில் உயர் கல்வி வழிகாட்டல் நடத்தப்பட்டது.

கடந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2 முடித்த மாண வர்கள், இந்த ஆண்டில் பல்வேறு வகை பட்டப் படிப்புகளில் சேர்ந்தனர்.

இந்நிலையில், அரசு பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களை, பள்ளிகளுக்கு அழைத்து, அவர்களின் உயர் கல்வி குறித்த தகவல்களை பெறவேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

உயர் கல்வியில் சேராத மாணவர்கள் யார், அவர்கள் தற்போது என்ன செய்கின்றனர் என் பதை அறிய வேண்டும். அவர்கள் மேல்படிப்பு படிக்காததன் காரணத்தை கேட்டு, அந்த விபரங் களை பதிவு செய்து கொள்ளவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

மேலும், பட்டம் அல்லது டிப்ளமா படிப்பில் சேராத மாணவர்களை, உயர் கல்வியில் சேர்வ தற்கான வழிகாட்டல்களை, பள்ளி ஆசிரியர்கள் வழங்குமாறு,பள்ளிக் கல்வி கமிஷனரகம் உத்தர விட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.