மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இலவச 'லேப்டாப்' அல்லது 'டேப்' எப்போது வழங்கப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிடாமல் உள்ளது.
மேல்நிலைக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த, 2011ல் துவக்கி வைத்தார். அ.தி.மு.க., ஆட்சி தொடர்ந்த வரை மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டது.
கடைசியாக, 2020ம் கல்வியாண்டுக்கான லேப்டாப், 2021ல் வழங்கப்பட்டது. 2021-22ம் கல்வியாண்டு நிறைவடைந்து, 2022-2023ம் கல்வியாண்டு துவங்கி மூன்று மாதங்களாகியும், 'லேப்டாப்' குறித்த அறிவிப்பை தி.மு.க., அரசு வெளியிடவில்லை. தி.மு.க., தேர்தல் அறிக்கையில், பள்ளி மாணவர்களுக்கு 'லேப்டாப்'புக்கு மாற்றாக 'டேப்' வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டது.
மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், 'தி.மு.க., ஆட்சிக்கு வந்து, 15 மாதங்களாகி விட்டது. தற்போது, அறிவிப்பு வெளியிட்டு, டெண்டர் பணிகளை துவக்கினால் தான், இந்தக் கல்வியாண்டு நிறைவு பெறுவதற்குள் மாணவர்களுக்கு 'லேப்டாப்' அல்லது 'டேப்' வழங்க முடியும்' என்றனர்.
மேல்நிலைக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த, 2011ல் துவக்கி வைத்தார். அ.தி.மு.க., ஆட்சி தொடர்ந்த வரை மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டது.
கடைசியாக, 2020ம் கல்வியாண்டுக்கான லேப்டாப், 2021ல் வழங்கப்பட்டது. 2021-22ம் கல்வியாண்டு நிறைவடைந்து, 2022-2023ம் கல்வியாண்டு துவங்கி மூன்று மாதங்களாகியும், 'லேப்டாப்' குறித்த அறிவிப்பை தி.மு.க., அரசு வெளியிடவில்லை. தி.மு.க., தேர்தல் அறிக்கையில், பள்ளி மாணவர்களுக்கு 'லேப்டாப்'புக்கு மாற்றாக 'டேப்' வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டது.
மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், 'தி.மு.க., ஆட்சிக்கு வந்து, 15 மாதங்களாகி விட்டது. தற்போது, அறிவிப்பு வெளியிட்டு, டெண்டர் பணிகளை துவக்கினால் தான், இந்தக் கல்வியாண்டு நிறைவு பெறுவதற்குள் மாணவர்களுக்கு 'லேப்டாப்' அல்லது 'டேப்' வழங்க முடியும்' என்றனர்.
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.