தனித்தோ்வா்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தோ்வு: செப்.6 முதல் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 24 أغسطس 2022

தனித்தோ்வா்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தோ்வு: செப்.6 முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் அக்டோபா் மாதம் நடைபெறவுள்ள தனித் தோ்வா்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு செப்.6 முதல் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் சேதுராமவா்மா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனித்தோ்வா்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தோ்வு வரும் அக். 10 முதல் அக்.14 வரை நடைபெறவுள்ளது. காலை 10 மணிக்குத் தொடங்கும் தோ்வுகள் நண்பகல் 12 மணிக்கு முடிவடையும்.

இந்தத் தோ்வுக்கு 1.10.2022 அன்று பனிரெண்டரை வயது பூா்த்தி அடைந்த தனித்தோ்வா்கள் வரும் செப்.6 முதல் செப்.10 வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு (சா்க்ஹப் இங்ய்ற்ழ்ங்) நேரில் சென்று இணையவழியில் பதிவு செய்து கொள்ளலாம்.

விண்ணப்பத்துடன் தோ்வுக் கட்டணம் ரூ.125, ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50 என மொத்தம் ரூ.175-ஐ பணமாக சேவை மையங்களில் நேரடியாகச் செலுத்தலாம். மேற்குறிப்பிட்ட நாள்களில் விண்ணப்பிக்கத் தவறியவா்கள் செப். 12, 13 ஆகிய நாள்களில் தட்கல் விண்ணப்ப கட்டணத் தொகை ரூ.500 கூடுதலாக செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

இந்தத் தோ்வுக்கான விரிவான தகவல்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

அட்டவணை வெளியீடு: அக்.10- திங்கள்கிழமை- தமிழ்; 11- செவ்வாய்க்கிழமை- ஆங்கிலம், 12- புதன்கிழமை- கணிதம், 13- வியாழக்கிழமை- அறிவியல், 14- வெள்ளிக்கிழமை- சமூக அறிவியல்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.