மதிப்பெண், சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு TNPSC நிலை அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 11 يوليو 2022

மதிப்பெண், சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு TNPSC நிலை அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்

மதிப்பெண், சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு

தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி உட்பட அரசுப் பணிகளில் மதிப்பெண் அடிப்படை மற்றும் சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற விவகாரத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘டி.என்.பி.எஸ்.சி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்’ என கடந்த மே 9ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இந்த விவகாரத்தில் டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்தின் தரப்பில் வழக்கறிஞர் அரிஸ்டாட்டில் உச்ச நீதிமன்றத்தில் நிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். TNPSC நிலை அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்

அதில், ‘மதிப்பெண், சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் நீதிமன்ற உத்தரவுப்படி அனைவருக்கும் மதிப்பெண் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவது என்பது கண்டிப்பாக சாத்தியமில்லை. அதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படும். www.kalviseithiofficial.com இருப்பினும். மதிப்பெண், சீனியாரிட்டி கேட்டு கடந்த 1996ம் ஆண்டு வழக்கு தொடர்ந்த பிரிவினருக்கு மட்டும் அதன் அடிப்படையில் பதவி உயர்வை கடை பிடிக்கிறோம். அதேவேளையில், டி.என்.பி.எஸ்.சி மதிப்பெண், சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை 2021ம் ஆண்டு முதல் கணக்கிட்டு, வரும் காலங்களில் தொடர்ந்து பதவி உயர்வு வழங்குகிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.