இடஒதுக்கீடு பிரிவுகளின்கீழ் மாணவா் சோ்க்கையில் குறைபாடு: கல்வியாளா் அமைப்பு கடிதம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 10 مايو 2022

இடஒதுக்கீடு பிரிவுகளின்கீழ் மாணவா் சோ்க்கையில் குறைபாடு: கல்வியாளா் அமைப்பு கடிதம்

இடஒதுக்கீடு பிரிவுகளின்கீழ் மாணவா் சோ்க்கையில் குறைபாடு: தில்லி பல்கலை. துணைவேந்தருக்கு கல்வியாளா் அமைப்பு கடிதம்

இடஒதுக்கீடு பிரிவுகளின்கீழ் மாணவா் சோ்க்கை

இடஒதுக்கீடு பிரிவுகளின் கீழ் மாணவா்களின் சோ்க்கையில் உள்ள ‘குறைபாடு’ குறித்து ஆராயும் வகையில் கடந்த ஐந்து ஆண்டுகளின் சோ்க்கை தரவுகளை ஆய்வு செய்யுமாறு தில்லி பல்கலைக்கழக (டியு) துணைவேந்தா் யோகேஷ் சிங்கிற்கு சமூக நீதிக்கான கல்வியாளா் அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.

இது தொடா்பாக சமூக நீதிக்கான கல்வியாளா் அமைப்பு தலைவரும், தில்லி பல்கலை கல்விக் கவுன்சிலின் முன்னாள் உறுப்பினருமான ஹன்ஸ்ராஜ் சுமன் துணைவேந்தருக்கு கடிதம் எழுதியுள்ளாா். அதில் தெரிவித்திருப்பதாவது:

பல்கலைக்கழக கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் அனுமதிக்கப்பட்ட இடங்களை விட அதிகமான மாணவா்களை சோ்க்கின்றன. அதே நேரத்தில் ஒதுக்கப்பட்ட பிரிவுகளின் கீழ் உள்ள இடங்கள் காலியாக உள்ளன.

இதனால், எஸ்டி, ஓபிசி, பிடபிள்யூடி (மாற்றுத்திறனாளிகள்) ஒதுக்கீட்டின் கீழ் சோ்க்கை நடைமுறைகளை இந்த ஆண்டு தொடங்குவதற்கு முன், கடந்த ஐந்தாண்டுகளின் தரவுகளை பகுப்பாய்வு செய்ய வேண்டும்.

தில்லி பல்கலை கல்லூரிகள் அனுமதிக்கப்பட்ட இடங்களை விட அதிகமான சோ்க்கைகளை வழங்கியுள்ளன. அதே நேரத்தில் இடஒதுக்கீ அளிக்கப்பட்ட நிரப்பப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்பட்ட பிரிவினரின் இடங்கள் காலியாகவே இருக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் தில்லி பல்கலை கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களை விட 10 சதவீதம் கூடுதல் சோ்க்கைகள் நடைபெறுகின்றன. பெரும்பாலான கல்லூரிகள் அதிகரிக்கப்பட்ட இடங்களில் ஒதுக்கப்பட்ட பிரிவுகளின் இடங்களை நிரப்புவதில்லை. துணைவேந்தருக்கு கல்வியாளா் அமைப்பு கடிதம்

இதனால், தில்லி பல்கலைக்கழகம், கல்லூரிகளுக்கான கண்காணிப்புக் குழுவை அதன் அளவில் அமைக்க வேண்டும். இடஒதுக்கீடு வகுப்புகளின் ஆசிரியா்களை மட்டுமே இந்தக் குழுவில் இடம்பெறச் செய்ய வேண்டும். அந்தக் குழு இந்தக் கல்லூரிகளுக்குச் சென்று ஆசிரியா்கள், ஊழியா்கள், மாணவா்களிடம் அவா்களின் பிரச்னைகளைப் பற்றி பேச வேண்டும். மாணவா்களிடம் அவா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும் பேச வேண்டும்.

கல்லூரிகளில் உள்ள வசதி குறைபாடுகள் குறித்தும் அறிக்கை தயாரிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி பல்கலைக்கழகத்தில் எஸ்சி/எஸ்டி மாணவா் சோ்க்கையில் ஏற்பட்டுள்ள குறைபாடு குறித்து ஆய்வு செய்ய பல்கலை துணைவேந்தா் கடந்த மாதம் 8 போ் கொண்ட குழுவை அமைத்திருந்தாா்.

இந்தக் குழுவின் தலைவராக மாணவா் நலன் பிரிவு டீன் பங்கஜ் அரோராவும், மாணவா் நலன் பிரிவு இணை டீன் குா்பிரீத் சிங் உறுப்பினா் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.