தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிட்ட பள்ளி கல்வித்துறை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 26 مايو 2022

தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிட்ட பள்ளி கல்வித்துறை

வரக்கூடிய கல்வியாண்டில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் குறித்த அறிவிப்பை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி கல்வித்துறைக்கான அறிவிப்பை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். அதன்படி 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 23ம் தேதியும், ஒன்று முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 26ம் தேதி வரையிலும் காலாண்டு தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 6ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு டிசம்பர் 19ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வுகள் நடைபெற உள்ளன. கோடை விடுமுறை ஏப்ரல் 28-ஆம் தேதி முதல் ஆரம்பமாகும் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.