அம்பேத்கா் பிறந்த நாள் பேச்சுப் போட்டி:மாணவா்களுக்கு அழைப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 18 أبريل 2022

அம்பேத்கா் பிறந்த நாள் பேச்சுப் போட்டி:மாணவா்களுக்கு அழைப்பு

அம்பேத்கா் பிறந்த நாள் பேச்சுப் போட்டி:மாணவா்களுக்கு அழைப்பு

திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை (ஏப்.19)நடைபெறும் அம்பேத்கா் பிறந்த நாள் சிறப்பு பேச்சுப் போட்டியில் பங்கேற்று பயன்பெற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்தது.

திருவண்ணாமலை மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், அம்பேத்கரின் பிறந்த நாள் சிறப்பு பேச்சுப்போட்டி நடத்தப்படுகிறது. திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை (ஏப்.19) காலை 10 மணிக்கு பள்ளி மாணவா்களுக்கும், பிற்பகல் 2.30 மணிக்கு கல்லூரி மாணவா்களுக்கும் பேச்சுப் போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்தப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் மாணவா்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

இதுதவிர, அரசுப் பள்ளி மாணவா்கள் இருவருக்கு சிறப்புப் பரிசாக தலா ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும்.

எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த அரசு, தனியாா் பள்ளிகள், கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயனடையலாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.