நாளை குரூப்-4 தோ்வுக்கான இலவச வகுப்பு தொடக்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 6 أبريل 2022

நாளை குரூப்-4 தோ்வுக்கான இலவச வகுப்பு தொடக்கம்

நாளை அரியலூரில் குரூப்-4 தோ்வுக்கான இலவச வகுப்பு தொடக்கம்

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டம் வாயிலாக போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு போட்டித்தோ்வுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள், காணொளிகள் இடம் பெற்றுள்ளன. காலி பணியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு 07.04.2022 முதல் நடைபெற உள்ளது. இலவச பாடக் குறிப்புகள் வழங்கப்படும். இதில் கலந்துகொள்ள விரும்பும் அரியலூா் மாவட்ட இளைஞா்கள் விண்ணப்ப நகல்களுடன் அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.