தலையில் கொண்டை வைத்துக்கொண்டு வந்த மாணவனை கண்டித்ததால், மாணவன் ஆவேசம்! தலைமையாசிரியர் அறை சூறையாடல்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 27 مارس 2022

தலையில் கொண்டை வைத்துக்கொண்டு வந்த மாணவனை கண்டித்ததால், மாணவன் ஆவேசம்! தலைமையாசிரியர் அறை சூறையாடல்!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மஞ்சினி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவன் ஒருவன், தலையில் பின்புறம் கொண்டைபோல் வைத்துக் கொண்டு நேற்று பள்ளிக்கு வந்துள்ளான்

.தலைமையாசிரியர் அந்த மாணவனை அழைத்து இதுபோல், பள்ளிக்கு வரலாமா என கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவன், அலுவலக அறையிலிருந்த நாற்காலி உள்ளிட்ட பொருட்களை கிழே தள்ளி உடைத்தான். சத்தம் கேட்டு அங்கிருந்த ஆசிரியர்கள் ஓடி வந்து மாணவனை சமாதானப்படுத்தினர்.

தகவலறிந்த பெற்றோர்- ஆசிரியர் கழக நிர்வாகிகளும், பள்ளிக்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

பின்னர் மாணவனிடம் பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வரும்படி கூறியதன் பேரில், அவன் பெற்றோரை அழைத்து வந்தான்.

அப்போது பீர் பாட்டிலை எடுத்து வந்து உடைத்து, என்னை மட்டும்தான் குறி வைத்து இப்படி கேட்கிறீர்கள் என தலைமை ஆசிரியரை நோக்கி குத்தச் சென்றான்.

சக ஆசிரியர்கள் அவனை தடுத்து நிறுத்தினர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.