பேனாக்களின் மூடிகளில் ஏன் ஓட்டை உள்ளது..? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 28 مارس 2022

பேனாக்களின் மூடிகளில் ஏன் ஓட்டை உள்ளது..?

பேனாக்களின் மூடிகளில் ஏன் ஓட்டை உள்ளது..?

பேனாக்களில் எழுதும்போது, அதன் மூடியில் ஒரு ஓட்டை இருப்பதை அனைவரும்; அறிந்திருப்பீர்கள், அதில் எதற்காக அவ்வாறு ஓட்டை இருக்கிறது என்று அறிந்துள்ளீர்களா..?

ஒரு சில குழந்தைகள் பேனாவின் மூடிகளை திறந்து வாயில் வைத்துக் கொண்டு எழுதம் பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள். சில சமயம் அவ்வாறு செய்யும்போது, பேனாக்களின் மூடியை குழந்தைகள் முழுங்கும் அபாயம் இருக்கிறது.

அவ்வாறு அவர்கள் முழுங்கிவிட்டால், அந்த ஓட்டையின் வழியாக காற்று உள்ளே சென்று சிறிது நேரத்திற்கு மூச்சு விட முடியும்.

அதற்குள் மருத்துவமனைக்கு சென்று அந்த குழந்தையின் உயிரை காப்பாற்றி விட முடியும்.

இந்த மாதிரி பேனாவின் மூடியை சில குழந்தைகள் முழுங்கி உயிரிழந்ததன், காரணமாக தான் இவ்வாறு ஒரு அம்சத்தை பெரும்பாலும் பேனா தயாரிப்பு நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.