பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் மோடி நாளை கலந்துரையாடல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, March 31, 2022

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் மோடி நாளை கலந்துரையாடல்

இந்தாண்டு 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி, டெல்லியில் உள்ள தல்கடோரா மைதானத்தில் நாளை நடைபெறுகின்றது.

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘இந்த ஆண்டுக்கான, ‘பரிக்சா பே சர்ச்சா’ மீதான உற்சாகமானது அளப்பரியது. லட்சக்கணக்கான மக்கள் தங்களின் மதிப்புமிக்க அறிவுக்கூர்மை, அனுபவங்களை பகிர்ந்துள்ளனர். அனைத்து மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பங்களிப்பை வழங்கிய ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி,’ என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.