10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: 79.88% தேர்ச்சி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 31 مارس 2022

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: 79.88% தேர்ச்சி

பிகாரில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கரோனா கட்டுப்பாடுகளுக்கு இடையே பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது முடிவுகள் வெளியாகியுள்ளன.

பிகாரில் 16.11 லட்சம் மாணவர்கள் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இதில் 12,86,971 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதனால் மொத்த மாணவர்களில் 79.88 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் முதல் நிலையில் 4,24,587 மாணவர்களும், இரண்டாவது நிலையில் 5,10,411 மாணவர்களும், மூன்றாவது நிலையில் 3,47,637 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

2022ஆம் ஆண்டு பொதுத்தேர்விலும் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை biharboard.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.