ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று ( 05.02.2022 ) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, February 5, 2022

ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று ( 05.02.2022 ) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை 600 006.

பத்திரிகைச் செய்தி

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்/உடற்கல்வி இயக்குநர் நிலை - 1/ கணினி பயிற்றுநர்கள் நிலை-1 2020 2021 காலிப்பணியிடங்களுக்கான பணித்தெரிவு சார்ந்து கணினி வழித் தேர்வு இரண்டு அட்டவணைகளில் முறையே 12.02.2022 முதல் 15.02.2022 வரை மற்றும் 16.02.2022 முதல் 20.02.2022 வரை (19.02.2022 நீங்கலாக உள்ளாட்சித் தேர்தல்) ஆகிய தேதிகளில் இருவேளைகளில் (காலை/மதியம்) நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு உரிய மாவட்டத்தின் நுழைவுச் சீட்டு (Admit Card) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www.trb.tn.nic.in ல் தேர்வர்கள் தங்களது User ID மற்றும் கடவுச் சொல் (password) உள்ளீடு செய்து 05.02.2022 முதல் பதிவிறக்கம் செய்யும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டள்ளது.

தேர்வர்கள் நுழைவுச் சீட்டினை printout எடுத்து தேர்வு மையத்திற்கு நுழைவுச்சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள நேரம் (Reporting Time) மற்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டையுடனும் (Original Identity Card) விண்ணப்பிக்கும் போது பதிவேற்றம் செய்த புகைப்படத்தின் அசல் பிரதியையும் (Original passport Size Photograph) தவறாமல் எடுத்து வர வேண்டும். தேர்வு நாளன்று தேர்வர்கள் முற்பகல் தேர்விற்கு 07.30 மணிக்குள்ளாகவும், பிற்பகல் தேர்விற்கு 1.30 மணிக்குள்ளாகவும் தேர்வு மையத்திற்கு கண்டிப்பாக வருகைபுரிய வேண்டும் என்ற விவரம் தெரிவிக்கலாகிறது.

தாமதமாக வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேற்படி கணினி வழித் தேர்விற்கான (Computer Based Examination) பயிற்சித் தேர்வு (Practice Test/Mock Test) மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் தங்களின் உள்நுழைவு மற்றும் கடவுச்சொல்லினைப் (Login ID and Password) பயன்படுத்தி www.trb.tn.nic.in-ல் இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இந்த பயிற்சி வினாக்கள் முற்றிலும் பயிற்சிக்காக மட்டுமே எனவும் தெரிவிக்கலாகிறது. மேலும் நுழைவுச் சீட்டில் மாவட்டம்/நகரம் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்விற்கு மூன்று நாட்களுக்கு முன்பு மீண்டும் ஒருமுறை தேர்வு மையத்தை குறிப்பிட்டு நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வர்கள் அதனையும் கண்டிப்பாக பதிவிறக்கம் செய்து தேர்வு நுழைவுச் சீட்டில் உள்ள அறிவுரைகளை தவறாமல் பின்பற்றி தேர்வு மையத்தில் தேர்வினை எழுத அறிவுறுத்தப்படுகின்றது. தேர்வு மையம் மாற்றம் குறித்த எவ்வித விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படமாட்டாது.

தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீட்டு அட்டவணை

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.