மாணவர்கள் அதிகம் பயிலும் பள்ளிகளில் சுழற்சி முறைப் பின்பற்ற படவேண்டும்! - ஆசிரியர்கள் நலக் கூட்டமைப்பு வேண்டுகோள்!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 30 يناير 2022

மாணவர்கள் அதிகம் பயிலும் பள்ளிகளில் சுழற்சி முறைப் பின்பற்ற படவேண்டும்! - ஆசிரியர்கள் நலக் கூட்டமைப்பு வேண்டுகோள்!!

மாணவர்கள் அதிகம் பயி லும் பள்ளிகளில் சுழற்சி முறையில் பள்ளிகளை நடத்தவேண்டும்முதலமைச் சருக்குதமிழ்நாடு அரசு ஊழி யர்கள் ஆசிரியர்கள் நலக் கூட்டமைப்பு சார்பில்வேண் டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து அமைப்பின் தலைவர் ச. அருணன் விடுத் துள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:

தமிழ்நாட்டில் வருகின்ற பிப்ரவரி 1-ம் தேதி முதல் அனைத்துப்பள்ளிகள்கல்லூ ரிகள் திறக்கப்படும் எனமுத லமைச்சர் மு.க. ஸ்டாலின் அறி வித்துஇருக்கின்றார்,எப்படி ஒருமனிதனுக்குஉயிர்முக்கி யமோ அதே அளவில் மாண வர்களுக்கு கல்வியும் முக்கி யம் என்ற அடிப்படையில் பள்ளிகள் கல்லூரிகள் திறக் கப்படும் என அறிவித்திருப் பதை தமிழ்நாடு அரசு ஊழி யர்கள் ஆசிரியர்கள் நலக் கூட்டமைப்பு சார்பில் வர வேற்று நன்றியை தெரிவித் துக் கொள்கிறேன், அதே வேலையில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டுதனியார்பள்ளிகளில் இருந்து லட்சக்கணக்கான மாணவர்கள் அரசு பள்ளிக ளில்சேர்ந்து பயின்றுவருகின் றனர். இந்த சூழ்நிலையில் பெரும்பாலானபள்ளிகளில் மாணவர்கள்சேர்க்கைஅதிக அளவில் உள்ளதால் வகுப் பறை போதுமானதாக இல் லாதசூழ்நிலைஉள்ளது.

இத னால் சமூக இடைவெளி கடைப்பிடிக்க இயலாமல் போக வாய்ப்பு இருக்கிறது. அதேபோன்று ஆசிரியர்கள் பற்றாக்குறையும் உள்ளது இதனை கருத்தில் கொண்டு மாணவர்கள் அதிக அளவில் பயிலும் பள்ளிகளில் சுழற்சி முறையில் மாணவர்களை வரவழைத்து மாணவர்கள் நலன் காக்க முதலமைச்சர் மற்றும்பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்ஆகியோரைதமிழ் நாடு அரசு ஊழியர்கள் ஆசிரி யர்கள் நலகூட்டமைப்புசார் பில் பணிவுடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.